Sunday, April 19, 2009

பொருளாதார நெருக்கடி: வெங்காயமா? வேர்கடலையா?

அதென்ன வெங்காயமா ? வேர்கடலையா ?

தற்பொழுது உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வெங்காயம் போல் இருந்து நமக்கு கண்ணீர் வரவழைத்துவிட்டு பின்பு ஒன்றுமில்லாமல் மறைந்துவிடுவதா? அல்லது உள்ளே விஷயம் இருக்கிறது என்பதை வெளிப்படையாக காட்டும் வேர்கடலையைப் போன்ற திடமானதா ?என்பதற்குதான் இந்த தலைப்பு.

ஷ்ஷப்பா...... ஒரு தலைப்புக்கு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையா ?

வடிவேலு பாணியில் சொன்னால் ”இப்பவே கண்ணகட்டுதே “ ! சரி விஷயத்திற்கு வருவோம்.

பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு

இது தான் முதல் தடவையென்றோ, இது தான்

அதிகவீரியம் கொண்டதென்றோ நாம் நினைத்தால் அது தவறு. ஏற்கனவே நாம் பாகிஸ்தனுடன் போரிட்ட 1960 களிலும், ஏன் 1990 களிலும் கூட பொருளாதார நெருக்கடி நம் நாட்டை வெகுவாக பாதித்துள்ளது.

அப்போதெல்லாம் செய்திபரப்ப இது போன்ற 24 மணிநேர ஊடகங்கள் இல்லை. விளைவுகளும் பெரிதாக உணரப்படவில்லை.

என்ன, தற்பொழுது ஊடகங்கள் உலக நிகழ்வுகளை விளக்குவதால் சாதாரண செய்தி கூட பூதகாரமாகத் தோன்றுகிறது. மற்றபடி வல்லுநர்களைப் பொருத்தவரையில் இந்த நெருக்கடி பத்தோடு ஒன்று பதினொன்று வகையறா தான்.

அமெரிக்க வங்கிகளும், நிதி நிறுவனங்களும் செய்த தவறுகளையும் அங்கு துவங்கிய சரிவு பற்றியும் ஏற்கனவே நிறைய பேசி எழுதியாகிவிட்டதால் அது நமக்கு வேண்டாம்.

நமது நாட்டின் தொழில் வளர்சியின் நிலைபாடு என்ன?

அது எந்த அளவிற்கு நம் நாட்டின் பொருளாதார வளர்சிக்கு உதவும் என்பது தான் முக்கியம்.

நமது நாட்டில் உற்ப்பத்தி நிறுவனங்களை பொருத்தமட்டில் ஏற்றுமதி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது ஏற்றுமதியாளர்களை ஊக்குவிக்க அரசாங்கமும் பல்வேறு வகையான சலுகைகளையும் வரிகுறைப்பு வாயிலாக செயல்படுத்தியுள்ளது. ஆனாலும் நிலைமை சீரடைய இன்னும் சில காலம் பிடிக்கும் என்றே தெரிகிறது.

2007ம் ஆண்டு நமது நாட்டின் தொழில்துறையின் வளர்ச்சி 10.9% ஆக இருந்தது அது படிபடியாக குறைந்து தற்போது 1.1% ஆக உள்ளது.

மற்ற நாடுகளைக் கணக்கெடுக்கையில் நமது நாட்டில் தொழில்துறையின் வளர்ச்சி இன்னும் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதால் பாதகமில்லை. ஆனலும் , இந்த மந்த நிலை நிரந்தரமுமில்லை.

சமீபத்தில், ஒரு பொருளாதார நிபுணர் சொன்ன கருத்து

மிகவும் வியப்பாக இருக்கிறது அதாவது பணவீக்கம் என்பது நமக்கு பிடிக்கும் ஜலதோசம் போன்றது. வரும் பின்பு தானே சரியாகிவிடும் !

பணவீக்க சதவீத புள்ளி விபரமும் அது போல ஏறும் இறங்கும். பின்பு தானே சீரடைந்து விடும்.

அதை கண்டுகொள்ளாமல் விடுவதே உத்தமம்.

இதே முறையே, சமீபத்திய பொருளாதார நெருக்கடிக்கும் கடைபிடிக்கலாம்! நிலைமையை ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் கவனித்துக்கொள்ளும்.

இனி இந்த பிரச்சனையை வெங்காயமா ? வேர்கடலையா? என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்!

நன்றி : www.rediffmail.com

Friday, March 13, 2009

ஸ்டாப் லாஸ் போடாமல் பங்கு வர்த்தகம் சரிதானா ??

வணக்கம்! பங்கு வணிகத்தில் ஈடுபட்டு இருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நம் குரு திரு சரவணக்குமார் அவர்களில் ஆசியுடன் பங்குவணிகம் பற்றிய எனது கருத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.


ஒரு அடிப்படை அறிவும் இல்லாமல் பங்கு வணிகத்தில் நம் நண்பர்கள் அதிகம் பேர் ஈடுபட்டு இருக்கின்றோம். அப்படி கண் தெரியாத குருடரைபோல தவித்த நமக்கு கலங்கரை விளக்கமாக இருந்து நம்மை கரையேற்றியது!!
தமிழில் பங்கு வணிகம் என்ற வலைத்தளமும்,அதன் ஆசிரியரான நம் வழிகாட்டி,நம் குரு திரு சரவணகுமார் அவர்களும்தான்.

தனது வேலை பணிகளுக்கு மத்தியில் நம் அனைவருக்கும் சார்ட் என்றால் என்ன? EMA என்றால் என்ன? SMA என்றால் என்ன ? MACD என்றால் என்ன? STS என்றால் என்ன? மேலும்,சப்போர்ட் லெவல் RESISTANCE லெவல் ,தின வர்த்தக குறிப்புகள் மேலும் வர்த்தகம் செய்வதற்கான அனைத்துவிதமான தகவல்களையும் பொறுமையுடனும்,அக்கறையுடனும் நமக்காக வழங்கி இருக்கிறார் மேலும்,தின வர்த்தகத்திற்கான அவர் கண்டு பிடித்த பிரத்த்யோகமான சில செட் அப் களும் நம் வர்த்தகத்திற்கு பெரிதும் உதவியாய் இருந்தன. அதில் நாம் பல வெற்றிகளையும் அடைந்து இருக்கின்றோம் .ஆனால்! அதே சமயம் நாம் நமது பழைய இழப்புகளில் இருந்து நாம் இன்னும் மீளவில்லை. வெற்றிக்கான வழிகளை சொல்லி கொடுத்தவர் நம் பணத்தின் பாதுகாப்புக்கான வழி முறைகளையும் சொல்லி கொடுத்து இருக்கிறார்.

அதுதான் ஸ்டாப் லாஸ் போடுவது

ஆனால்? அதை நாம் கடை பிடிக்கிறோமா?அதுதான் இல்லை.ஸ்டாப் லாஸ் என்றாலே வேப்பங்காயாய் கசக்கிறது. தரிசு நிலமாய் இருந்த நம்மை உழுது ,நீர்பாய்ச்சி,நடவு நட்டு ,உரம் போட்டு விவசாயம் செய்ய பொறுமையுடனும் அக்கறையுடனும் சொல்லி தருகிறார்! நாமும் அதை நன்றாகத்தான் கற்று கொண்டோம்.உழுதோம்,நீர்பாய்ச்சினோம்,நடவு நட்டோம்,உரம் போட்டோம் பயிர் வளரும் நேரத்தில் பாதுகாக்க தவறி விடுகிறோம் பயிர் வளரும் நேரத்தில் ஸ்டாப் லாஸ் எனும் வேலி போட தயங்குகிறோம் .நாம் ஆசையுடன் வளர்த்த பயிரை விலங்குகள் மேய்வதை இதயத்தில் இரத்தம் கசிய வேடிக்கை பார்க்கிறோம் . நன்றாக யோசித்து பார்த்தால் ஸ்டாப் லாஸ் மட்டும் போட்டு இருந்தால்.நாம் எல்லோருமே இன்று வெற்றியாளர்கள்தான்.

ஒரு நாட்டில் ராணுவ செலவு மட்டும் இல்லையெனில் அந்த நாடு கண்டிப்பாக பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும்.ஆனால் எல்லா நாடுகளுமே ராணுவத்திற்குத்தான் அதிக செலவு செய்கின்றன.ராணுவ ஆட்சி நடக்கும் நாடாக இருந்தாலும் சரி மக்கள் ஆட்சி செய்யும் நாடும் சரி.ஒரு நாடு பொருளாதாரத்தில் சிறந்து,, பாதுகாப்பு இல்லையெனில்? அது நல்லநாடா ? ஒரு நாட்டிற்கு ராணுவ பாதுகாப்பு எவ்வளவு அவசியமோ அதேபோல!!
பங்கு வர்த்தகத்திற்கு ஸ்டாப் லாஸ் அவசியம்.

நண்பர்களே! என்ன இவன் ஓவரா அட்வைஸ் பண்ணுறானே அப்படின்னு நினைக்காதிங்க! இந்த விஷயங்கள் எல்லாம் எனக்கு நானே சொல்லி கொண்டதுதான் சமீபமா நான் ஸ்டாப் லாஸ் போட்டு பெரிய இழப்புகளை தவிர்த்து இருக்கிறேன்.


முதலில் ஸ்டாப் லாஸ் போட்டு அந்த ஸ்டாப் லாஸ் உடைபடுவதை பார்த்து ஜீரணிக்க பழக வேண்டும்.அதுதான் முதல் வெற்றி! அதை சகஜ நிகழ்வாக ஏற்று கொள்ள வேண்டும்.


ராணுவம் இல்லாத நாடு

வேலி இல்லாத பயிர்

பூட்டு இல்லாத வீடு

ஸ்டாப் லாஸ் இல்லாத வர்த்தகம்

எல்லாம் ஒன்றுதான்...

வேடிக்கையாய் சொல்ல வேண்டும் என்றால் ஸ்டாப் லாஸ் போடாமல் வர்த்தகம் செய்வதைவிட அந்த பணத்தை திருப்பதி கோயில் உண்டியலிலோ? பழனி கோயில் உண்டியலிலோ போடுவது சிறந்தது.

Saturday, January 3, 2009

03/01/2009


இங்குள்ள சர்ட் படி .. இந்த வாரம் சந்தை உயர்விற்கு பல சாதகங்கள் உள்ளன .. 3118 மட்டுமே இப்போதைக்கு தடைகல்லாக இருக்கும் என நினைக்கிறேன் .. 3178, 3298, 3311 could make double tops ..

உங்கள் எண்ணங்களையும் வெளி படுத்தவும் ..

Wednesday, December 24, 2008

A VERY HAPPY NEW YEAR

AND WISH YOU ALL, GOOD HEALTH, PEACE AND HAPPINESS.




Success is not a gift or gain

Success is not the money or the fame

Let us believe that success is an ongoing process

Opportunity is not success

But success Is the recognised or unrecognised Fulfilment of opportunity

Let us use this oppurtunity and get along with the process of success.

இனியெல்லாம் சுகமே.